எதிர் இருக்கைப் பயணி
சே குவேரா பனியன் அணிந்து
சப்பாத்தி சாப்பிட்டு
கோக் குடித்தான்
ஆங்கிலத்தில் உரையாடி
அதிகாலை எழுப்பிவிடக்
கேட்டுக்கொண்டான்
பாதி உறக்கத்தில்
கண் விழித்த நான்
பத்திரமாக இருக்கிறதா
எனப் பார்த்துக் கொண்டேன்
என் சூட்கேஸையும்
எதிர் இருக்கைப் பயணியையும்.
அவனது கண்களும்
பாரதி திறந்திருந்தன
என் மீதும் அவன்
சூட்கேஸ் மீதும்!
எழதியவர்; - பாப்பு
புத்தகம்: ஆனந்தவிகடன்

No comments:
Post a Comment