Thursday, September 30, 2010

நீராக இரு...

நீராக இரு...

நீரிலிரூந்து பிறந்தவனே!
நீ ஏன் நீராகவே இரூக்கக் கூடாது?
நீ மட்டும் நீராகவே இருந்தால்
இல்லாமல் போகமாட்டாய்.

நீ மட்டும் நீராகவே இருந்தால்
தவிர்க்கப்பட முடியாதவனாய் இருப்பாய்
நீ மட்டும் நராகவே இருந்தால்
உன்னை யாரும் காயப்படுத்தவவே முடியாது.
நீரைப்போல் மென்மையாக இரு.

நீர் ஆயுதமில்லாமல் போராடுகிறது.
ஆனால் எல்லாவற்றையும் வென்றுவிடுகிறது.
நீரைப்போல் கீழ்நோக்கிச் செல்.
கீழேசெல்வது தாழ்ந்துபோதல் அல்ல -
ஆழ்ந்து போதல்.

ஆழமே முத்துக்களை கர்ப்பம் தரிக்கிறது.
கீழே செல்லும் நீர்தான் மேலே செல்கிறது.
இந்த பூமியில் நீரைவிட மேலே செல்வது எது?
நீரைப்போல் ஓடுகிறவனாக இரு.
ஓடுவதுதான் வாழ்க்கை, நிற்பது மரணம்.
நீரைப்போல் உன் கரைகளை
நீயே உண்டாக்கிக் கொள்.

நீரைப்போல் உன் சிறைகளிலிருந்து
கசிகின்றவனாக இரு.
நரைப்போல் தாக வேர்களுக்கெல்லாம்
தாய்ப்பாலாய் இரு.

நீரைப்போல் சுத்தம் செய்கிறவனாய் இரு -
அப்போதுதான் நீ தெவிட்டாதவனாக இருப்பாய்.
நீரைப்போல் சலனமற்றிரு.

சூரியனும் சந்திரனும் உனக்குக் கிடைப்பார்கள்.
நீரைப்போல் -
தாமைாஇலைக்குக் கீழேயும் மேலேயும்
வெவ்வவேறுவிதமாய் இரு.

நீரைப்போல் எல்லாவற்றையும்
எழுதுகிறவனாய் இரு.
உன்மேல்யாரும் எழுத முடியாதபடி இரு.
நீரைப்போல்-
எங்கே சுற்றி அலைந்தாலும்
இருதியில் உன் மூலசமூத்திரத்தை
அடைவதையே குறிக்கோளாய்க்
கொள்வாயாக!


புத்தகம்; குங்குமம்
கவிக்கோ. அப்துல் ரகுமான்

No comments:

Post a Comment